\
கொண்டை ஊசி வளைவில் அந்தரத்தில் தொங்கிய லாரி

கொண்டை ஊசி வளைவில் அந்தரத்தில் தொங்கிய லாரி

கொண்டை ஊசி வளைவில் அந்தரத்தில் தொங்கிய லாரி
Published on

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான லாரி, தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது.

திம்பம் மலைப்பாதையில் 27-வது கொண்டை ஊசி வளைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து ஏற்பட்ட போது, ஓட்டுநரும், உதவியாளரும் லாரியிலிருந்து குதித்து உயிர் தப்பினர். 5 மணி நேரமாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த லாரியை காவல்துறையினர் மீட்டனர். அதுவரை திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com