தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முறைகேடாக தனியாருக்கு பட்டா மாற்றி கொடுக்கப்பட்ட 182 ஏக்கர் அரசு நிலத்தில், கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
தேனி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள், பெரியகுளம் சார் ஆட்சியரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் எந்தெந்த நிலங்களில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட 182 ஏக்கர் அரசு நிலம், அரசு அதிகாரிகளின் உதவியுடன் தனியாருக்கு பட்டா மாற்றப்பட்டுள்ளது என்றும், கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களின் மதிப்பீடு கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கணக்கீடு முடிந்தவுடன் கனிம கொள்ளையில் 15 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.