டோக்கன்... நீண்ட வரிசை.. காத்திருப்பு - தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக்!!

டோக்கன்... நீண்ட வரிசை.. காத்திருப்பு - தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக்!!
டோக்கன்... நீண்ட வரிசை.. காத்திருப்பு - தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக்!!

டாஸ்மாக் வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்தது. இதனை அடுத்து இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 135 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் கொடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம். மேலும் டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்க வேண்டும், மது விநியோக கவுண்ட்டர்களை அதிகரிக்கச் செய்யவேண்டும், பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும் என உத்தரவுகள் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுகுடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கை முடியும் வரை மற்றவர்கள் அமர வைக்கப்பட்டனர். டோக்கன், தனிமனித இடைவெளி என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுகுடிப்போர் மதுவாங்கிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com