ஏப்ரல் 20ல் தமிழகத்தில் மக்களவை தேர்தல்?

ஏப்ரல் 20ல் தமிழகத்தில் மக்களவை தேர்தல்?

ஏப்ரல் 20ல் தமிழகத்தில் மக்களவை தேர்தல்?
Published on

மக்களவை தேர்தல் ஜுரம் தமிழகத்தில் ஏற்கனவே பரவியிருக்கிறது. தேர்தல் அறிவிக்கும் முன்பே யார் யாரோடு கூட்டணி என்ற விஷயங்கள் உறுதியாகியிருக்கிறது. சிலர் மட்டும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பை வெளியிட ஆணையம் தயராகி விட்டது. ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்த உகந்த சூழல் உள்ளதா என்பதை ஆராய வரும் மார்ச் 4-ம் தேதி தேர்தல் ஆணைய அதிகாரிகள் அங்கு செல்ல உள்ளனர். ஏனெனில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டி உள்ளது. 

இதனிடையே மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 2-ம் வாரத்தின் முதல் பாதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரதமர் தலைமையில் மார்ச் 6-ம் தேதி அனைத்து மாநில செயலர்கள் கூட்டம் ஒன்று நடைபெற இருப்பதாகவும் அதற்கு பின்னரே அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக மார்ச் 9 அல்லது 10-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. 

லோக் சபாவின் பதவிக்காலம் ஜூன் 3-ம் தேதியும் சிக்கிம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 27-ம் தேதியும், அருணாச்சல பிரதேச சட்டமன்ற ஆயுட்காலம் ஜூன் 1ம் தேதியும், ஆந்திரா மற்றும் ஒடிசா முறையே ஜூன்18, ஜூன் 11 ஆகிய தேதிகளில் முடிவடைகின்றன. எனவே மே 27-ம் தேதிக்கு முன்னரே தேர்தல் முடிவுகளை வெளியிடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசிய போது, மொத்தமாக 7 அல்லது 8 கட்ட தேர்தலுக்கு வாய்ப்பிருப்பதாகவும் , முதல் கட்டத்தில் பதட்டம் மிக்க மாநிலங்களில் வாக்குப்பதிவு இருக்கும் என்றும் தெரிவித்தனர். குறிப்பாக ஜம்மு , சத்தீஸ்கர் , நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்கள் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் எனத் தெரிவித்தனர். தமிழகத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இருக்கலாம் என்றும் ஏப்ரல் 20 வாக்கில் தேர்தலுக்கு வாய்ப்பு எனவும் குறிப்பிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com