திருவள்ளூரில் இன்று 43 பேருக்கு கொரோனா உறுதி!

திருவள்ளூரில் இன்று 43 பேருக்கு கொரோனா உறுதி!

திருவள்ளூரில் இன்று 43 பேருக்கு கொரோனா உறுதி!
Published on

திருவள்ளூரில் இன்று 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் திருவள்ளூரில் இன்று 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 32 பேர், மீஞ்சூரில் 6 பேர், பூந்தமல்லியில் 4 பேர் உட்பட இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 380ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com