சேலத்தில் மின்னல் தாக்கி கொழுந்துவிட்டு எரிந்த பச்சை மரங்கள்

சேலத்தில் மின்னல் தாக்கி கொழுந்துவிட்டு எரிந்த பச்சை மரங்கள்
சேலத்தில் மின்னல் தாக்கி கொழுந்துவிட்டு எரிந்த பச்சை மரங்கள்

சேலத்தில் மின்னல் தாக்கியதில் பச்சை தென்னை மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தலைவாசலில் உள்ள தியாகனூர் ஊராட்சி இந்திரா நகர் காலனி பகுதியைச் சேர்ந்த மல்லிகா (60) என்பவரின் வீட்டின் முன்புறம் இருந்த இரண்டு தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் இரண்டு மரங்களும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com