தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு - எடை குறைவால் மக்கள் அதிர்ச்சி

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு - எடை குறைவால் மக்கள் அதிர்ச்சி
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு - எடை குறைவால் மக்கள் அதிர்ச்சி

பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி திராட்சை 50 கிராம் மாறாக 10 கிராம் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏலக்காயை வெறும் 2 கிராம் மட்டுமே உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பரிசு வழங்குவதில், ஏதாவது குறையிருந்தால், அவற்றை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் / மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என, ஆட்சியர் அறிவித்திருந்தார். தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்திற்காக 1,088 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வரும் 21 பொருட்களில், ஒருசில பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பொருட்களின் எடையும் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏலக்காய், முந்திரி போன்ற பொருட்களின் எடை சரியாக இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், 21 பொருட்களுக்கு மாறாக 18 பொருட்களே உள்ளதாகவும் ரேஷன் அட்டைதாரர்கள் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களில் வண்டு இருப்பதாகவும், வெல்லம் தரமானதாக இல்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் குறிப்பாக நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் முந்திரி ஏலக்காய் திராட்சை பொருட்களில் முந்திரி 50 கிராம் திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் இருக்க வேண்டும். ஆனால், முந்திரி வெறும் 10 கிராம் திராட்சை 15 கிராம் ஏலக்காய் 2 கிராம் தான் இருக்கிறது இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பொங்கல் பரிசு பொருட்கள் எடை குறைவு ,பாக்கெட் உடைப்பு போன்ற குறைகள் இருப்பதால் மக்களுக்கும் விற்பனையாளர்களுக்கு இடையில் பிரச்னை எழுகிறது.

இந்த மாதிரியான தகராறுகளை குறைப்பதற்காக அரசு வழங்கும் 21 வகையான பொங்கல் பரிசு பொருட்கள் எந்த குறைபாடும் இல்லாமல் ரேஷன் கடைகளுக்கு விநியோக்கிப்பட்டால் எந்த மனக்கசப்பும் வராது என பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்கும்பொழுது வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து குழுக்கள் அமைத்து எடை குறைவாக வழங்கப்படும் கடைகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com