குன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..!

குன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..!

குன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..!
Published on

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு‌ இடங்களில் ஏற்பட்ட ‌வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

குன்னூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் நகர், வேளாங்கண்ணி சாலை, சிடிசி சாலை ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குன்னூர் நகரப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையோரம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த 5-க்கும் மேற்பட்ட லாரிகள் நிலச்சரிவில் சிக்கி‌க்கொண்டன. 

கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதில் 19 வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வேளாங்கண்ணி சாலை பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.‌ கிருஷ்ணாபுரம் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் த‌ரக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அதற்கென 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com