திருச்சி: வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தப் பெண் - மின்கம்பி அறுந்து விழுந்து பலி

திருச்சி: வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தப் பெண் - மின்கம்பி அறுந்து விழுந்து பலி
திருச்சி: வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தப் பெண் - மின்கம்பி அறுந்து விழுந்து பலி

திருச்சி மாவட்டம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 52 வயதான பெண் கூலித் தொழிலாளி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, காட்டூர் கொத்தமங்கலம் பகவதி அம்மன் கோயிலைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி ஜானகி, கூலி வேலை செய்துவந்தார். வழக்கம் போல் இன்று விவசாய தினக் கூலி வேலைக்கு ஜானகி சென்றார். அதேப் பகுதியைச் சேர்ந்த சாலை சுந்தரம் என்பவரது வயலில் பயிரிட்டுள்ள நெல் பயிரை, ஜானகி அறுவடை செய்து கொண்டிருந்தார்.

அப்போது வயலுக்கு மேலே சென்ற மின்சார கம்பி அறுந்து, ஜானகி மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகியின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com