சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக 1996ஆம் ஆண்டு முதல் 2006 வரை லட்சுமியே போட்டியின்றி தேர்வாகி வந்தார். அதன் பின் தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட மேல்மருவத்தூர், தற்போது மீண்டும் பொது ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தலைவர் பதவிக்கு போட்டியிட சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லட்சுமி பங்காரு அடிகளார் வேட்புமனு தாக்கல் செய்தார்.