காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஏரிகளில் 542 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. கனமழை காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 170 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 315ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 ஏரிகளும்அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.
தொடர்புடைய செய்தி: "மிக மோசமான கட்டத்தை தாண்டிவிட்டோம்"- சென்னை மழை குறித்து வெதர்மேன் கருத்து
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் நிலவரம்:
* காஞ்சிபுரம் மாவட்டம் - 170 ஏரிகள் 100%; போலவே 147 ஏரிகள் 75%; 34 ஏரிகள் 50% நிரம்பியுள்ளன
* செங்கல்பட்டு மாவட்டம - 315 ஏரிகள் 100%; 158 ஏரிகள் 75%; 53 ஏரிகள் 5% நிரம்பியுள்ளன
* திருவண்ணாமலை மாவட்டம - 56 ஏரிகள் 100%; 18 ஏரிகள் 75%; 19ஏரிகள் 50% நிரம்பியுள்ளன
இப்படியாக மொத்தமாக திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 542 ஏரிகள் என்று 100% தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது 342 ஏரிகள் 75%, 106 ஏரிகள் 50% மீதமுள்ள 32 ஏரிகள் 25% குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.
- பிரசன்னா