குழந்தை கொலை: எதிர்வீட்டுப் பெண் கைது

குழந்தை கொலை: எதிர்வீட்டுப் பெண் கைது
குழந்தை கொலை: எதிர்வீட்டுப் பெண் கைது

எண்ணூரில் குழந்தை ரித்திகா கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர்வீட்டுப் பெண் ரேவதி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா குப்பைமேட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். குழந்தையில் வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததாலும், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானதாலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக குழந்தை ரித்திகா அடிக்கடி சென்று விளையாடும் எதிர்வீட்டினர் உள்பட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில் குழந்தையை நகைக்காக எதிர்வீட்டுப் பெண் ரேவதி கொலை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரித்திகாவின் கொலுசு உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com