தீ எச்சரிக்கை ஒலியால் தரையிறக்கப்பட்ட விமானம்

தீ எச்சரிக்கை ஒலியால் தரையிறக்கப்பட்ட விமானம்
தீ எச்சரிக்கை ஒலியால் தரையிறக்கப்பட்ட விமானம்

நடுவானில் தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஏ320 ரக இண்டிகோ விமானம், அதிகாலை1.20 மணிக்கு 160 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்குப் புறப்பட்டது. கால் மணி நேரம் பறந்த நிலையில், தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பினர். 

இதையடுத்து, விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. எனினும், விமானத்தின் சரக்கு வைப்பிடப் பகுதியில் வெளியான லேசான புகையால் தவறுதலாக எச்சரிக்கை மணி ஒலித்ததாக ஆய்வில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com