தொடர் மழையால் உருவான புது அருவிகள்

தொடர் மழையால் உருவான புது அருவிகள்
தொடர் மழையால் உருவான புது அருவிகள்

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பெய்துவரும் மழையால், புதிய அருவிகள் உருவாகி காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

குன்னூரை அடுத்த பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, குன்னூர் மேட்டுபாளையம் ரயில்பாதையில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இதேபோன்று குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஹில்குரோவ் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அருவிபாய்ந்து வருவது, அப்பகுதி ரயில் பயணிகளுக்கு அச்சம் கலந்த மகிழச்சியைத் தந்துள்ளது.

மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையின் ஓரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன. இந்த அருவிகள் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும், பார்ப்போரின் கண்ணிற்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com