கும்பகோணம்: திமுக கவுன்சிலரின் தந்தை கொலை - பணம், நகைகளுக்காக கொலையா என விசாரணை

கும்பகோணம்: திமுக கவுன்சிலரின் தந்தை கொலை - பணம், நகைகளுக்காக கொலையா என விசாரணை

கும்பகோணம்: திமுக கவுன்சிலரின் தந்தை கொலை - பணம், நகைகளுக்காக கொலையா என விசாரணை
Published on

கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் 63 வயதாகும் அப்துல் ராஜாக். வெளிநாட்டில் இருந்து விட்டு, அதன் பிறகு ஊருக்கு வந்து ராஜகிரியில் கைலி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு நான்கு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். ஒரு மகனைத் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மகள் ஹதிஜா பிவி கும்பகோணம் மாநகராட்சியில் திமுகவின் 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அப்துல் ரஜாக் வழக்கம்போல் ராஜகிரியில் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

மறுநாள் காலையில் வேகு நேரம் ஆகியும் ராஜகிரியில் கடை திறக்காததால் அங்குள்ளவர்கள் அப்துல் ரசாக்கின் மகனுக்கு தகவல் தெரியப்படுத்தி உள்ளனர். உடனடியாக அவரது மகன் முகமது ஆரிப் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது பூட்டு உடைக்கப்பட்டுள்ளதையும், தந்தை காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு தஞ்சை எஸ்பி ரவிப்பிரியா பாபநாசம் டிஎஸ்பி பூரணி, அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா, ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் ஹேமா தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், மோப்ப நாய் டப்பி கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெகுநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com