கிருஷ்ணகிரி | மகன் இறப்பிற்கு நீதிகேட்டு மகளோடு சேர்ந்து தாய் எடுத்த விபரீத முடிவு... நடந்தது என்ன?

சாலை விபத்தில் உயிரிழந்த தன் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தன் மகளுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தாய் காமாட்சி மற்றும் அவரின் மகள்
உயிரிழந்த தாய் காமாட்சி மற்றும் அவரின் மகள்file image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரி (21). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த கிரி
உயிரிழந்த கிரி

கிரிக்கும் வேறு சில நபர்களுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் கிரியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக்கூறி அவருடைய தங்கை (12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி), தாய் காமாட்சி (40) ஆகிய இருவரும் சூளகிரி போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மனமுடைந்து வீட்டிற்கு சென்ற இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

உயிரிழந்த தாய் காமாட்சி மற்றும் அவரின் மகள்
"என்னை மனதார மன்னித்து விடுங்கள்" - திருடிய பணத்துடன் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்!

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களுடைய வீட்டில் சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. கிரியின் தங்கை எழுதியாக சொல்லப்படும் அந்த கடிதத்தில், "என் அண்ணன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது சாவிற்கு யாரும் காரணமில்லை. தற்போது என் அண்ணனுடன் நாங்கள் என மூன்று உயிர்கள் போன பிறகு நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை. என் அண்ணன் கிரி வாங்கி கொடுத்த செயினை கழுத்தில் அணிந்துள்ளேன். நான் இறந்த பிறகும் அதை அகற்ற வேண்டாம்" என எழுதப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த கிரியின் இறப்பிற்கு நீதி கேட்டு அவருடைய தாயும் தங்கையும் ஒரேநேரத்தில் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com