சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவு

சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவு
சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவு

சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்‌ உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழையபேட்டை, கோட்டை உள்ளிட்ட பகுதியில் ஆட்சியர் கதிரவன் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும், பழைய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், சாலைகளிலுள்ள குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த வேண்டும், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கொசு மருந்து தெளிக்க வேண்டும் என சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com