கோயம்பேடு சந்தை மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு

கோயம்பேடு சந்தை மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு
கோயம்பேடு சந்தை மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு

நாளையிலிருந்து (08.01.2022) அதிகாலை ஒரு மணி முதல் மதியம் ஒரு மணிவரை மட்டும் கோயம்பேடு வணிக வளாக மார்க்கெட் இயங்கும் என்று கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 09.01.2022 வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை. கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசின் ஆணைக்கிணங்க CMDA.MMC நிர்வாக அவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்து வியாபாரிகளும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்; முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்; கைகளை அடிக்கடி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நோய் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com