“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி 

 “மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி 
 “மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி 

6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை நேற்று தமிழ்நாடு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் 6 பேரும் கோவையில் தங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததாக தெரிகிறது. இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் என்றும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. 

மேலும் இவர்கள் அனைவரும் இந்துக்களை போன்று உருமாறி கோவையில் உலாவி வருவதாக அதிர்ச்சி தரும் தகவலை காவல்துறைக்கு கொடுத்தது. இதனையடுத்து கோவையிலுள்ள ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. மேலும் கோவை நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கோவை காவல் ஆணையர் சுமித் சரண், “6 பயங்கரவாதிகள் கோயம்புத்தூர் நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது. போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகவலை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவான எச்சரிக்கைதான். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநக போலீசார் தரப்பில் இருந்து எவ்வித புகைப்படங்களும் வெளியிடவில்லை. எங்கிருந்து தகவல் வந்தது என்று வெளியிடமுடியாது.” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com