கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களாவில் சேகரிக்கப்பட்ட 9 பொருட்கள் ஒப்படைப்பு-தீவிரமடையும் விசாரணை!

கோடநாடு பங்களாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் சேகரிக்கப்பட்ட 9 வகையான பொருட்களை உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கியிருந்த அறைகளின் வரைபடம், அறைக்கதவின் தாழ்ப்பாள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள், புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கோடநாடு வழக்கு வரும் 28-ம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது சிபிசிஐடி போலீஸ் தரப்பில் இடைக்கால அறிக்கையினை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com