“வழக்கை திரும்பப்பெறு” கன்னியாஸ்திரிக்கு மிரட்டல் விடுத்த பாதிரியார்

“வழக்கை திரும்பப்பெறு” கன்னியாஸ்திரிக்கு மிரட்டல் விடுத்த பாதிரியார்
“வழக்கை திரும்பப்பெறு” கன்னியாஸ்திரிக்கு மிரட்டல் விடுத்த பாதிரியார்

பாலியல் தொடர்பான வழக்கை திரும்பப்பெறுமாறு கன்னியாஸ்திரியை கேரள பாதிரியார் மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது.

கேரளாவில் பிரோன்கோ முலாக்கல் என்ற பாதிரியார் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புகாரளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அனுபமா என்ற மற்றொரு கன்னியாஸ்திரி இருந்து வருகிறார். இந்நிலையில் அனுபமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஞ்சிராப்பள்ளி பாதிரியார் ஜேம்ஸ் என்பவர் மிரட்டும் வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் வீடு உள்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும் இல்லையெனில் கெடுபிடி நிறைந்த இடங்களுக்கு அவர்களை மாற்றிவிடுவதாகவும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். ஊடகங்களில் இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோப்பதிவு வழக்குக்கு கூடுதல் வலு சேர்க்கும் என கன்னியாஸ்திரி தரப்பில் நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com