கீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்

கீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்
கீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்

கீழடியில் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், அதற்காக தோண்டப்பட்ட 54 குழிகளும் இன்று மூடப்பட உள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கெனவே 4 கட்டங்களாக நடந்து முடிந்த அகழாய்வில் பழந்தமிழர்களின் நாகரிகத்துக்கு சாட்சியாக ஏராளமான பொருள்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 13-ஆம் தேதி கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அகழ்வாராய்ச்சிக்காக 54 குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில், செங்கல் கட்டுமான சுவர்கள், உறைகிணறுகள், நீர்வழிச்சாலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த சுடுமண் சிற்பங்கள் என, பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்கான 800-க்கும் அதிகமான சான்றுகள் கிடைத்தன.

அகழாய்வு நடத்தப்படும் பகுதிகளை சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஓரிரு வாரங்களில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கீழடியில் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், அதற்காக தோண்டப்பட்ட 54 குழிகளும் இன்று மூடப்பட உள்ளன. 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com