கவிக்கோ அப்துல் ரஹ்மான் மரணம்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் மரணம்
கவிக்கோ அப்துல் ரஹ்மான் மரணம்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். 79 வயதான அவர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று நள்ளிரவு 2:00 மணிக்கு காலமானார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், உடல்நலம் தேறியதால் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பினர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென மூச்சுத்திண்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல்ரகுமான், சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.

அப்துல் ரகுமானுக்கு மெஹபூப் பேகம் என்ற மனைவியும், சையது அஷ்ரஃப், வஹிதா என்ற பிள்ளைகளும் உள்ளனர். அப்துல் ரகுமானின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புதுக்கவிதைத்துறையில் சிறந்து விளங்கிய அப்துல் ரகுமான், அவரது ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். மதுரை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அப்துல் ரகுமான், திமுக ஆட்சியில் வக்ஃபு வாரிய தலைவர் பதவியை வகித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com