மதுரை: நடிகர் தனுஷை தனது மகன் எனக் கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் தனுஷை தனது மகன் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
கதிரேசன் - மீனாட்சி
கதிரேசன் - மீனாட்சி PT WEB

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் - மீனாட்சி தம்பதி. இவர்கள் இருவரும், நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனிடையே நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பிறப்புச் சான்றிதழ் போலியானது என்று மேலூர் கதிரேசன் - மீனாட்சி தம்பதி மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீண்டும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறிய நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதற்கு முன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் கதிரேசன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com