கரூர் மாணவி தற்கொலை: காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின்னணி தகவல்

கரூர் மாணவி தற்கொலை: காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின்னணி தகவல்
கரூர் மாணவி தற்கொலை: காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின்னணி தகவல்

கரூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கான பின்னணி தகவல் வெளியாகியுள்ளன.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பியிருக்கிறார். தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தில் ’பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசிப்பெண் நானாகத்தான் இருக்கவேண்டும்’ என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார். மாணவி உயிரிழந்தபின் கடிதத்தையொட்டி, அவரது குடும்பத்தினர் வெங்கமேடு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் ஏற்காத நிலையில், தற்போது அதிரடியாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்கான பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி உயிரிழந்த பிறகு நேற்று இரவு வெங்கமேடு காவல்நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளிக்கச் சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் அளிக்க வந்த, சிறுமியின் தாயை திட்டியதோடு மதுபோதையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், தற்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com