தாமரைக்கண்ணன் - 25 - பாகநத்தம், கரூர்
ஹேமலதா - - 28 - விஸ்வநாதபுரி, கரூர்
சாய்லெட்சனா - 8 - விஸ்வநாதபுரி, கரூர்
சாய்ஜீவா - 4 - விஸ்வநாதபுரி, கரூர்
சுகன்யா - 33- காவலர் காலனி, கரூர்
ஆகாஷ் - 24 - காமராஜ்புரம் வடக்கு, கரூர்
தனுஷ்குமார் -24 - காந்திகிராமம், கரூர்
வடிவழகன் - 54- பசுபதிபாளையம், கரூர்
ரேவதி - 52 - கொடுமுடி, ஈரோடு
சந்திரா - 40 - ஏமூர் புதூர், கரூர்
குருவிஷ்ணு - 2 - வேலுச்சாமிபுரம், கரூர்
ரமேஷ் - 32 - கோடங்கிபட்டி, கரூர்
சனோஜ்வர்ஷன் - 13 - தாந்தோனி கிராமம், கரூர்
ரவிகிருஷ்ணன் - 32- எல்.என்.எஸ்.கிராமம், கரூர்
பிரியதர்ஷினி - 35 - ஏமூர் கிராமம், கரூர்
தரணிகா - 14 - ஏமூர் கிராமம், கரூர்
பழனியம்மாள் - 11 - வேலுச்சாமிபுரம், கரூர்
கோகிலா - 14 - வேலுச்சாமிபுரம், கரூர்
மகேஷ்வரி - 45 - அருகம்பாளையம், கரூர்
அஜிதா - 21 - அரவக்குறிச்சி, கரூர்
மாலதி - 36 - ராயனூர் வடக்கு, கரூர்
சுமதி - 50 - ரெத்தினம் சாலை, கரூர்
மணிகண்டன் - 33 - காங்கேயம், திருப்பூர்
சதீஷ்குமார் - 34 - கொடுமுடி, ஈரோடு
கிருத்திக்யாதவ் - 7 - ஐந்து ரோடு, கரூர்
ஆனந்த் - 26 - சுக்காம்பட்டி, சேலம்
சங்கர் கணேஷ் - 45 - குஜிலியம்பாறை, திண்டுக்கல்
விஜயராணி -42 - பிச்சம்பட்டி, கரூர்
கோகுலபிரியா -28 - காங்கேயம், திருப்பூர்
பாத்திமா பானு - 29 - ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
கிஷோர் - 17 - அன்பு நகர், கரூர்
ஜெயா - 55 - வெங்கமேடு, கரூர்
அருக்காணி - 60 - ஏமூர் கிராமம், கரூர்
ஜெயந்தி - 43 - புகளூர், கரூர்
கோகுலஸ்ரீ - 24 - உப்பிடமங்கலம், கரூர்
கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நிலையில், அருணா ஜெகதீசன் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில், விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
#JUSTIN | இபிஎஸ் குற்றச்சாட்டு.. அமைச்சர் பதில்#Karur | #KarurTragedy | #MaSubramanian | #EdappadiPalaniswami pic.twitter.com/2isbLGSz1J
— PttvOnlinenews (@PttvNewsX) September 28, 2025
கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசை விமர்சித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முந்தைய கூட்டங்களை ஆய்வு செய்த பிறகுதான், கூடுதல் கட்டுப்பாடுகளை தவெகவிற்கு காவல் துறை விதித்ததாகவும், உடனே தவெகவினர் நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காவல் துறை நிபந்தனைகள் எதுவும் தவெக பரப்புரையில் கடைபிடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தவெகவினர் எல்லை மீறி நடக்க எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைத்துவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்தால் அரசாங்கம் இடையூறு செய்கிறது என, தவறான தமிழகத்திற்கு தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் பழனிசாமி எனவும் விமர்சித்துள்ளார். காவல் துறை விதித்த நிபந்தனைகளை கடைபிடிக்காததாலேயே, கரூர் சம்பவம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அனுமதி தராவிட்டால் அதில் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் நிபந்தனைகளை மீறுவது என, மோசமான அரசியலுக்கு தவெக மாறிவருவதாகவும் சாடியுள்ளார். கூட்டத்தை காட்ட முட்டு சந்துதான் தேவை என, மக்களை அலைக்கழிப்பதே பழனிசாமி போன்றோரின் கேவலமான அரசியலாக இருப்பதாக கூறியுள்ள மா.சுப்பிரமணியன், மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள், பிணங்களின் மீது அல்ல என கூறியுள்ளார்.
நாமக்கல்லில் பரப்புரையை முடித்த தவெக தலைவர் விஜய், மாலை 6.40 மணிக்கு கரூரில் பரப்புரை மேற்கொண்ட இடத்தை வந்தடைகிறார். 10 நிமிடங்களுக்கு பின்னர், விஜய் மைக்டெஸ்ட் செய்கிறார். 7 மணி 6 நிமிடங்களுக்கு பரப்புரை களத்தில், ஒருபகுதியில் மின் தடை ஏற்பட்டது. 7.10 மணியளவில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்டது. 7 மணி 12 நிமிடங்களுக்கு, விஜய் பேச்சை தொடங்குகிறார். 2 நிமிடங்கள் கழித்து, விஜய் பேசுவது கேட்கவில்லை என தொண்டர்கள் கோஷமிடுகின்றனர்.
7மணி 20 நிமிடங்களுக்கு, ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியாக செல்கிறது. தொடர்ந்து விஜய் பேச்சை தொடங்குகிறார். ஆனால் மைக் வேலை செய்யவில்லை. 7 மணி 33 நிமிடங்களுக்கு பல ஆம்புலன்ஸ்கள் பரப்புரை நடந்த இடத்திலிருந்து, கரூர் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தன. ஒரு நிமிடத்திற்கு பிறகு விஜயின் மைக் மீண்டும் வேலை செய்யவில்லை. அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. 7 மணி 43 நிமிடங்களுக்கு விஜய் பேச்சை நிறைவு செய்துவிட்டு, புறப்படுகிறார்.
ஆளுங்கட்சி தவிர, பிற கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு, காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோருடன், கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பழனிசாமி, கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கூட்டநெரிசலில் சிக்கி காயமுற்று, சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் துறையினர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அரசியல் நோக்கத்துடன் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிகாலை 3 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணையத்தின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கரூரில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து இரவோடு இரவாக புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்தார். அதிகாலை 3.30 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றடைந்த அவர், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியே சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தான்தோன்றி மலை சிவசக்திநகரைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் 8 வயதான சாய்லக்ஷனா, 4 வயதான சாய்ஜீவா ஆகிய செல்லக் குழந்தைகளின் மரணம், மொத்த ஊரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் எதிர்காலத்தின்மீது ஆயிரம் கனவுகளுடன், ஆர்வமிகுதியில் தாயும் இரண்டு குழந்தைகளும் ஒன்றாகப் பரப்புரைக் கூட்டத்தைக் காணச் சென்றனர்.
விஜயின் பேச்சைக் கேட்க, ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் நடுவே அந்தத் தாயும், கைக்குழந்தைகளும் மகிழ்ச்சியோடு நின்றார்கள். ஆனால், ஒரு சிலநிமிடங்களில் அந்தச் சூழல், கொடூரமான முடிவைக் கொண்டுவரும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய அந்த மூன்று பேரும்,பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று, அந்த வீட்டில் தாயின் சிரிப்பும், குழந்தைகளின் கலகலப்பும் நிரந்தரமாக மௌனித்துவிட்டது... வீட்டில் உள்ளோர், ஒரே நேரத்தில் மூன்று பேரை இழந்து நிற்கின்றனர்... இந்த சம்பவம் காலத்தால் மறக்க முடியாத பெரும் சோகத்தை கரூரில் பதித்துவிட்டது...
கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.