“நெல்லை கொலையில் கார்த்திகேயனுக்கு முக்கியத் தொடர்பு” - காவல்துறை உறுதி

“நெல்லை கொலையில் கார்த்திகேயனுக்கு முக்கியத் தொடர்பு” - காவல்துறை உறுதி
“நெல்லை கொலையில் கார்த்திகேயனுக்கு முக்கியத் தொடர்பு” - காவல்துறை உறுதி

நெல்லை முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட கார்த்திகேயனுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூன்று பேர் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். ஆனால் சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் திமுக நிர்வாகி சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயனை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கார்த்திகேயனுக்கு கொலையில் முக்கிய தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அத்துடன் அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com