திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா
திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து 10 நாட்களுக்கு இரவும் பகலும் இவ்விழா நடைபெறுகிறது. பத்தாம் நாளான வரும் 29ஆம் தேதி காலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் நாளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபத் திருநாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்லவும் , மலை ஏறவும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com