\
கார்கில் போர் வெற்றி தினம்- திருச்சியில் மேஜர் சரவணன் நினைவுத் தூணில் அதிகாரிகள் மரியாதை

கார்கில் போர் வெற்றி தினம்- திருச்சியில் மேஜர் சரவணன் நினைவுத் தூணில் அதிகாரிகள் மரியாதை

கார்கில் போர் வெற்றி தினம்- திருச்சியில் மேஜர் சரவணன் நினைவுத் தூணில் அதிகாரிகள் மரியாதை
Published on

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் நாயகன் மேஜர் சரவணன் நினைவுத்தூணில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கார்கில் போரில் வீரர்களை முன் நின்று வழிநடத்தி வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் நினைவுத் தூணில் ராணுவத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவுத் தூணிலும்  ராணுவத்தினர், காவல் துறையினர், மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com