கன்னியாகுமரி டூ டெல்லி: ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி செல்லும் சிஆர்பிஎப் வீரர்கள்

கன்னியாகுமரி டூ டெல்லி: ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி செல்லும் சிஆர்பிஎப் வீரர்கள்
கன்னியாகுமரி டூ டெல்லி: ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி செல்லும் சிஆர்பிஎப் வீரர்கள்

தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்கோட் வரை சைக்கிள் பேரணி செல்லும் சிஆர்பிஎப் வீரர்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' (பிட் இந்தியா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்கோட் வரை சுமார் 2,800 கீமீ தூரம் சைக்கிளில் பேரணியாக செல்கின்றனர்.

நேற்று கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியில் 15 வீரர்கள் மற்றும் ஐந்து மாற்று வீரர்கள் என மொத்தம் 20 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று மாலை நெல்லை வந்தடைந்த வீரர்களை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் வரவேற்றார். இதையடுத்து இன்று அவர்களை நெல்லையிலிருந்து வழியனுப்பும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சைக்கிள் பேரணி செல்லும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர், உற்சாகமுடன் வீரர்களை வழியனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com