கன்னியாகுமரி: செல்ஃபி மோகத்தால் இரு வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

கன்னியாகுமரி: செல்ஃபி மோகத்தால் இரு வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
கன்னியாகுமரி: செல்ஃபி மோகத்தால் இரு வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை அருகே ஆலஞ்சி பாரைக்கல் பீச் கடற்பகுதியில் உள்ள பாறைகளில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது சறுக்கி விழுந்து கடல் அலையில் சிக்கி இரு வாலிபர்கள் மாயமான நிலையில் இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.


செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி பகுதியில் உள்ள உறவினரின் வீட்டு கிரஹப் பிரவேசத்திற்கு கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அன்று சென்றிருந்தனர். அன்று மாலை 5 மணி அளவில் அவர்கள் குறும்பனை பகுதியில் உள்ள பாரைக்கல் பீச் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் கடற்கரையில் அமைந்துள்ள பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, பாறையின் தன்மை அறியாத இவர்கள் பாறையிலிருந்து சறுக்கி கடலில் விழுந்து அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் பாலாஜி (19), கருங்கல் அருகே கப்பியறை பகுதியைச் சேர்ந்த ஜெபின் (24) ஆகியோர் கடலில் மாயமாகினர்.


இதையடுத்து, இவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை படகுகள், மற்றும் அப்பகுதியிலுள்ள மீனவர்களும் ஈடுபட்டு வந்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு சென்ற மீனவர்கள் நடுக்கடலில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த பாலாஜி மற்றும் ஜெபின் ஆகியோரின் உடலை மீட்டு கரை சேர்த்தனர்.

இதனையடுத்து அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com