'அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' - கனிமொழி

'அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' - கனிமொழி
'அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' - கனிமொழி

''அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார் கனிமொழி. 

மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தந்தையின் நினைவலைகள் குறித்து நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ''அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com