மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்pt desk

காஞ்சிபுரம் | பெண் தூய்மைப் பணியாளரிடம் மனிதக் கழிவை அகற்றச் சொன்ன மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்!

ஸ்ரீபெரும்புதூரில் பெண் தூய்மைப் பணியாளரை மனிதக் கழிவை அகற்றக் கோரி, மேற்பார்வையாளர் ஒருமையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் 5 பிரிவின் கீழ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கெஜா (53). பெண் தூய்மைப் பணியாளரான இவர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். இதனால், எரிவாயு தகன மேடை அருகில் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த மனிதக் கழிவை அகற்ற வேண்டும் என கெஜாவிடம், மேற்பார்வையாளர் சேக்கிழார் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கெஜாவை தகாத வார்த்தைகளால் பேசி, திட்டிக் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கெஜா, ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்தார்.

மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
திருப்பூர் | கல்குவாரி நீரில் மூழ்கிய தாய் சடலமாக மீட்பு - 2 குழந்தைகளை தேடும் பணி தீவிரம்

புகாரின் பேரில், போலீசார் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை பிரிவு, பணியாளரை ஒருமையில் பேசுதல், உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சேக்கிழாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் சேக்கிழாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com