காஞ்சிபுரம்: கட்டிய 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்த இருளர் குடியிருப்பு - 8 வயது சிறுமி பலி

காஞ்சிபுரம்: கட்டிய 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்த இருளர் குடியிருப்பு - 8 வயது சிறுமி பலி
காஞ்சிபுரம்: கட்டிய 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்த இருளர் குடியிருப்பு -  8 வயது சிறுமி பலி

காஞ்சிபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்த இருளர் குடியிருப்பில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மாரி, ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு லதா (8) என்ற 3ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், இன்று திடீரென வீட்டின் நடுவில் உள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதில், வீட்டின் உள்ளே இருந்த லதா இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் ஒரத்தூர் கிராமம் இருளர் குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இவர்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு வீட்டிலும் 2 குடும்பங்களுக்கு மேல் இடநெருக்கடியுடன் வசிக்கும் நிலை உள்ளது.

மேலும், கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், சுவற்றில் பல இடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகுந்த சிரமத்துடன் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், வீட்டின் குறுக்குச் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com