காஞ்சிபுரம்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் ஓட்டு வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உள்பட்ட பாவாஜி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் எரிவாயு சிலிண்டர் குடோன் அமைக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீதிமன்றம், காவல் நிலையம், கிளை சிறைச்சாலை, பள்ளிக்கூடம் என மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த குடோன் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், மாவட்ட தீயணைப்புத் துறையும் இந்த குடோனுக்கு எப்படி அனுமதி அளித்தது என வியப்பாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி அந்த எரிவாயு குடோனை குடியிருப்புகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்றம் வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொண்ட வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், ஓட்டு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு நிரம்பிய சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஓட்டு வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிலிண்டர் எந்த ரசீதும் இன்றி யாருடைய அனுமதியும் பெறாமல் எவ்வாறு வந்தது என அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com