புறாக்களை சுட்ட ஊழியர்: தனியார் ஆலை மீது ப்ளூ கிராஸ் புகார்

புறாக்களை சுட்ட ஊழியர்: தனியார் ஆலை மீது ப்ளூ கிராஸ் புகார்

புறாக்களை சுட்ட ஊழியர்: தனியார் ஆலை மீது ப்ளூ கிராஸ் புகார்
Published on

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் ஆலை மீது ப்ளூ கிராஸ் அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள பிள்ளைச்சத்திரத்திலுள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது.அந்த ஆலையில் பணியாற்றும் வெளிநாட்டு நபர் ஒருவர், துப்பாக்கியால் புறாக்களை சுடும் காட்சி அடிப்படையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர் பணியாற்றும் இடத்தின் மேற்கூரையில் அமர்ந்திருக்கும் புறாக்களை அந்த நபர் சுடுவதும், அதில் இறந்து விழும் புறா ஒன்றிணை கையில் எடுத்துச் செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.‌ அதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆலை மீதும், புறாக்களை சுட்ட நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாலாஜா ‌காவல்நிலையத்தில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் புகாரளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com