பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார் - கமல்ஹாசன்

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார் - கமல்ஹாசன்
பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார் - கமல்ஹாசன்

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

ஒருவரை வார்த்தைகளால் கண்டிக்க வேண்டும் என்றால் அவரை வெங்காயம் என திட்டுவார் பெரியார். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்று விளக்கம் கொடுத்தார். இன்று விலையேறி மக்களை அதிரவைக்கிறது வெங்காயம். இது தொடர்பாக பெரியார்-வெங்காயம் கருத்துகளும் இணையத்தில் பரவி வருகின்றனர்.

இந்நிலையில் 'பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

'பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே?' எனக் குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com