“பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது” - தா.பாண்டியன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

“பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது” - தா.பாண்டியன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
“பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது” - தா.பாண்டியன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது என தா.பாண்டியன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரக தொற்று, சிறு நீரக செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தா.பாண்டியன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், தா.பாண்டியன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com