சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், அபயம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இலவச மருத்துவ உதவி மையத்தை தொடக்கிவைத்த பின், மேடையில் பேசியபோது இவ்வாறு கூறினார். முன்னதாக, அந்த மருத்துவ உதவி மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைச் சந்தித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார். தீராத நோயினால் அவதிப்படுபவர்களுக்கு இலவசமாக வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வரும் தன்னார்வலர்கள் கொண்ட தொண்டு நிறுவனம், இந்த மருத்துவ உதவி மையத்தை தொடக்கியுள்ளது.