கள்ளக்குறிச்சி: ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

கள்ளக்குறிச்சி: ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்
கள்ளக்குறிச்சி: ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் மூழ்கிய 2 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் (10) மற்றும் வெங்கடேஷ் என்பவரின் மகன் கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த 6.9.2021 அன்று பள்ளி பயிலும் தன்னுடைய சகோதரிக்கு மதிய உணவு அளிக்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையிலும் காவல் துறையினர் காணாமல் போன சிறுவர்களை தேடிவந்தனர். அப்போது சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு பின்புறம் உள்ள கல்லிகுட்டை என்ற சித்தேரியில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல் துறையின்ர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சிறுவர்களை சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com