கள்ளக்குறிச்சி: கணவர் இறந்த துக்கத்தில் மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு

கள்ளக்குறிச்சி: கணவர் இறந்த துக்கத்தில் மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு
கள்ளக்குறிச்சி: கணவர் இறந்த துக்கத்தில் மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு

கள்ளக்குறிச்சி அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவி மற்றும் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவங்கூர் சாலையில் வசித்து வந்த தாமோதரன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்த தாமோதரனின் மனைவி திவ்யா மற்றும் அவரது மகள் ஷாலுவிகா இருவரும் தங்களது வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.


இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மற்றும் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com