\
ஆதரவற்றவர்களை குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் காவல் கரங்கள் அமைப்பு

ஆதரவற்றவர்களை குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் காவல் கரங்கள் அமைப்பு

ஆதரவற்றவர்களை குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் காவல் கரங்கள் அமைப்பு
Published on

ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ளவர்களை சென்னை காவல்துறையின் காவல் கரங்கள் அமைப்பு மீட்டு கரம்கொடுத்து காத்துவருகிறது.

சென்னை காவல்துறையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ’காவல் கரங்கள்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் சென்னையிலும் மற்றும் தமிழகத்தில் இருந்து காணாமல் போய் பிற மாநிலங்களிலும் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் மனநலம் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், பெண்கள், குழந்தைகளை கண்டறிந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் குடும்பத்தினரோடு சேர்த்து வைக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரை டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து மீட்டு குடும்பங்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com