பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் - கே.எஸ்.அழகிரி

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் - கே.எஸ்.அழகிரி
பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் - கே.எஸ்.அழகிரி

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்ரவரி 25-ஆம் தேதிமுதல் காங்கிரஸில் விருப்பனு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மார்ச் 5 ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூ. 5000, தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ. 2500-ம் கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்து, இதர விபரங்களை விருப்பமனுவுடன் சேர்த்து நன்கொடை தொகையை TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வரைவோலையாக சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com