”இதெல்லாம் அக்கிரமம்” - இந்தியா பெயரை மாற்றுவது குறித்து கே.பாலகிருஷ்ணன்!

”இந்தியா என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ”இந்தியா என்ற நாட்டுக்குப் பல்வேறு பெயர்கள் இருந்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் இந்தியா என்ற பெயர்தான் நிலைத்து நின்றுள்ளது. இந்தியா என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் அக்கிரமம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com