சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர் கமல், ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘பழைய பாட்டுத்தான் இருந்தாலும் என்ற தலைப்பில், ’தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.