‘மை லார்ட்’ வேண்டாம்...‘சார்’ போதும்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

‘மை லார்ட்’ வேண்டாம்...‘சார்’ போதும்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
‘மை லார்ட்’ வேண்டாம்...‘சார்’ போதும்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

காலனித்துவ, நிலப்பிரபுத்துவ முறையை குறிக்கும் மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை கைவிட வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி மூலம் சென்னையிலிருந்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். அப்போது, “காலனித்துவ, நிலப்புரபுத்துவ முறையை குறிக்கும் மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை கைவிடவேண்டும். மரியாதை நிமித்தமாக அழைக்கூடிய 'சார்' என்று சொன்னாலே போதும். நாட்டின் தற்போதைய வளர்ச்சி விகிதத்திற்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது. அப்படி செய்தால் மக்களின் உணவை பறிக்கும் செயலாக அமைந்துவிடும்.

நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருகிறது. நிலம் ஒரு பற்றாக்குறையான பொருளாக மாறிவருகிறது. ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சமீபகாலங்களில் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட வன நிலங்களை திரும்ப ஒப்படைத்து, வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்ணுக்கு தெரியாத வைரஸ் பலரை மரணத்தில் தள்ளியுள்ள நிலையில், நம் மக்கள் இயற்கையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வளர்ச்சி மீது அக்கறை கொள்ளும் அதே நேரத்தில், இயற்கை மற்றும் விலங்குகள் மீதான மாண்பை காண்பித்து, இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் தீர்வை வழங்கும் நீதிபதிகள், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். நீதிமன்றத்தை திறந்து வைப்பது குறித்து பெருமை தெரிவிக்கும் அதேவேளையில், சாமானியர்களுக்கு கட்டுமானங்கள் மட்டும் நீதியை வழங்காது. நீதியை நாடுபவர்களுக்கு உகந்ததாகவும், நபர்கள் அதை அணுகுவதற்கு உகந்ததாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் அணுகுமுறையும் மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.ஆனந்த் வெங்கடேஷ், பி.புகழேந்தி, மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா உள்ளிட்ட நீதித்துறையை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com