ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்பு - ஒருவர் கைது

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்பு - ஒருவர் கைது

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்பு - ஒருவர் கைது
Published on

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டதுடன், ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போனது. போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகையானது உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை காவல் துறையினர் தோண்டி எடுத்துள்ளனர்.

இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com