சுபஸ்ரீ உயிரிழப்பு : ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை

சுபஸ்ரீ உயிரிழப்பு : ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை

சுபஸ்ரீ உயிரிழப்பு : ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை
Published on

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அகற்றாததால் பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில், சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அகற்றாததால் பள்ளிக்கரணை ஆய்வாளர் அழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com