ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு
Published on

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரான துஷ்யந்த் தவே வழக்கை விசாரித்த பினாக்கி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வின் முன் ஆஜரானார். அப்போது சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஆவது குறித்து சுட்டிக்காட்டவேண்டிய சங்கடமான கடமை தமக்குள்ளதாக துஷ்யந்த் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்கும்படி கூறினர். இதனால் மேல்முறையீடு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டணையை ரத்து செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஜெயலலிதா, சசிகலா , சுதாகரன் மற்றும் இளவரசியின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசுத் தரப்பிலும், திமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com