ஜாங்கிட்டின் பதவி உயர்வுக்கான தடை நீக்கம்

ஜாங்கிட்டின் பதவி உயர்வுக்கான தடை நீக்கம்

ஜாங்கிட்டின் பதவி உயர்வுக்கான தடை நீக்கம்
Published on

கூடுதல் டிஜிபி ஜாங்கிட்டின் பதவி உயர்வுக்‌கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

துறை சாராத மூன்றாவது நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் பதவி உயர்வுக்கு தடை விதிக்கப்பட்டதால், பொறுப்பேற்க முடியவில்லை என ஏற்கனவே ஜாங்கிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை இன்று நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கூடுதல் டிஜிபி ஜாங்கிட்டின் பதவி உயர்வுக்கு தனி நீதிபதி சுப்ரமணியம் விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசு, டிஜிபி‌ மற்றும் மனுதாரர் வித்‌யா ஆகியோர் 2 வா‌ரங்களுக்குள் பதில் அளிக்‌கவும் உத்தரவிட்டனர். கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த ஜாங்கிட், சமீபத்தில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இதை எதிர்த்து ரியல் எஸ்டேட் அதிபர் வித்யா தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி சுப்ரமணியன்,‌ பதவி உ‌யர்வுக்கு தடை‌ விதித்திருந்தார்.‌
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com